இறுதிப்போரின்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் தொடர்பான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று (29.09.2016) விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
ஆனந்தி சசிதரனால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை கடந்த பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற விசாரணையின் போது இவ் வழக்கினை விசாரணை செய்த மனு தரப்பு சட்டத்தரணியிடம் குறுக்கு விசாரணை செய்தபோது சரணடைந்த போராளிகள் விபரம் தங்களிடம் இருப்பதாக இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சாணக்கிய குணவர்த்தண அவர்கள் சாட்சியம் அளித்தார். அந்த விபரத்தினை முல்லைத்தீவு நீதிபதி சமர்ப்பிக்க உத்திரவிட்டபோதும் 14.07.2016 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதிலும் புனர்வாழ்வு அதிகார சபையினால் விடுவிக்கப்பட்ட போராளிகளின் பெயர் விபரம் சமர்ப்பிக்கப்பட்டபோதும். கே.ஏஸ்.இரட்ணவேல் அவர்களின் குறுக்கு விசாரணையின்படி நிதீபதியால் ஏற்றுக்கொள்ளப்படாமல் வழக்கு இன்றைய தினம் 29.09.2016. முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் வழக்கு எடுத்துக்கொள்;ளப்பட்ட போதிலும் இராணுவத் தளபதியினால் இந்த ஆவணத்தைத் தவிர வேறு ஆவணங்கள் எம்மிடம் இல்லை எனத் தெரிவித்து, வழக்கினை முடிவுக்குக்கொண்டு வரும்படி கேட்டதையடுத்து முல்லைத்தீவு நீதிவானால் எதிர்வரும் 22.11.2016 அன்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தகவல் :- கலைச்செல்வன், முல்லைத்தீவு.