முஸ்லிம் வர்த்தகரின் 20 வயது மகனை கடத்தி 2 கோடி பணம் கேட்டு மிரட்டல்..

168

வாரியப்பொல பகுதியில் முஸ்லிம் வர்த்தகரின் 20 வயது மகன் ஒருவர் இனந்தெரியாதோரால் நேற்றிரவு கடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வாரியப்பொல நகரிலுள்ள தனது தந்தையின் கடையிலிருந்து வீடு நோக்கி சென்றுகொண்டிருந்த வேளையிலேயே இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரியவருகிறது.

கடத்தல் காரர்கள் காரில் வந்ததாகவும், குறித்த இளைஞனின் அபயக்குரல் அக்கம்பக்கம் கேட்டதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கும் அதேவேளை கடத்தப்பட்டு சுமர் அரை மணி நேரத்தின் பின்னர் குறித்த இளைஞனின் தொலைபேசி ஊடாக கடத்தல் காரர்கள் இளைஞனின் தந்தையிடம் தொடர்பு கொண்டு

“உங்களது மகனை நாம் கடத்தி வைத்துக்கொள்ளோம், 2 கோடி பணம் தந்தால் விடுவிப்போம், இல்லையெனில் மகனை பார்க்க மாட்டீர்கள்”
என்று கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது பொலிஸ் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்!ar

SHARE