இலங்கை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ள தேசிய பொங்கல் விழா நடைபெறவுள்ள பலாலி இராஜேஸ்வரி ஆலயத்திற்கு அண்மையில் உள்ள படைமுகாங்களை அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இராணுவ அதி உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள பலாலி கண்ணார் வயல் சிறீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலையத்தில் தேசிய பொங்கல் விழாவினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நிகழ்வு நடைபெறவுள்ள ஆலயத்தினை சூழவும், அதனை அண்மித்தும் உள்ள படைமுகாங்கள் அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆலைய சூழலினை துப்பரவு செய்யும் நடவடிக்கையிலும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு இராணுவ முகாங்கள் அகற்றப்படும் பகுதிகள் உட்பட மேலும் சில ஏக்கர் காணிகள் ஜனாதிபதி, பிரமரின் உத்தரவின் பேரில் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மறுபுறம் நிகழ்வு நடைபெறும் பகுதியினை இராணுவப் பிரதேசமாக் காட்டுக் கொள்ள விரும்பாமல் அப்பகுதிகளில் உள்ள படைமுகாங்கள் அகற்றப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.