தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கும், வடமாகாணசபையின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்குமிடையில் இன்று காலை கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற இக் கலந்துரையாடலின் பொழுது தமிழர் பேரவை பற்றிய உருவாக்கம் பற்றியும் அதனுடைய செயற்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடிய பாராளுமன்ற உறுப்பின் சிறீதரன் அவர்கள் இப்பேரவை குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியிருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவோ அல்லது அதனுடைய செயற்பாட்டை முடக்குவதற்காகவோ இந்த தமிழர் பேரவை உருவாக்கப்படவில்லை. என்னை வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முடக்குவதற்கு நான் இடமளிக்கப்போவதில்லை. இதில் புத்திஜீவிகள் அரசியல் அவதானிகள், சமூக அமைப்புக்கள் கட்சி சார்ந்தவர்கள் எனப் பலரும் இதில் இணைந்து கொண்டு தமிழ் மக்களுக்கான வரைவொன்றைத் தயாரித்து அந்த வரைவின் மூலம் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே இந்த அமைப்பு உருவாக்கப்படுகின்றது என்பதைத் தெரிந்து கொண்டு இதற்கு நான் தலைமை தாங்கினேன் ஒழிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பல்வேறு கூறுகளாக உடைத்து அதில் அரசியல் நடத்த நான் வரவில்லை. ஊடகங்கள் இதனை திரிவு படுத்தி செய்திகளை வெளிவிடுகின்றன. பிரச்சனை உருவாகது விட்டாலும் பிரச்சனையை உருவாக்கி விடுகின்றார்கள். ஊடகாங்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஒரு பேரவையினுடைய ஆரம்பத்திலேயே இவ்வாறான பிரச்சினைகள் தோற்றுவிக்கப்படுகின்றபொழுது அது தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல சிங்கள அரசியல் வாதிகள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்து தமிழ் மக்களுக்கான தீர்வினை செயலிலக்கும் நடவடிக்கைகளில் இறங்குவதற்கு வாய்ப்புக்களை வழிவகுக்கும்.
பதவிமோக ஆசைகளுக்கு நான் செயற்படுவதாக ஒரு சிலர் கூறுகின்றார்கள். பாலியல் சுவாமி பிரேமானந்தா அவர்களுடன் தொடர்பு படுத்திப் பேசுகின்றார்கள். ‘முழங்களுக்கும் மொட்டம் தலைக்கும் முடிச்சுப் போட’ ஒரு சிலர் முனைகின்றார்கள். தமிழ் மக்களுக்கான தீர்வு என்கின்ற பொழுது அதைக் குழப்பும் நடவடிக்கையில் நான் இல்லை. தமிழ் மக்கள் பேரவை பிழையான பாதையில் செல்கின்றது என்று நான் கண்டால் அதிலிருந்து விலகி என்னுடைய செயற்பாடுகளை மக்கள் நலனுக்கா முன்னெடுத்துச் செல்வேனே தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவு படுத்தும் துரோகச் செயல்களில் ஈடுபடமாட்டேன். என்ற பானியில் அவருடைய பதில்கள் அமையப்பெற்றது. என்றும் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.