மூன்றாவது திருமணம் விவகாரம்: வாய் திறந்தார் இம்ரான் கான்

180

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், தற்போதைய அரசியல்வாதியுமான இம்ரான் கான் மூன்றவாது முறையாக திருமணம் செய்து கொண்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.

ஆனால், தற்போது இம்ரான் கான் வெளியிட்டுள்ள தகவலில், தனது மூன்றாவது திருமணம் குறித்து வெளியான செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றது என விவரித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, எவரிடமும் சொல்லாமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. அப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பினால், பெரும் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் தெஹ்ரிக் இன்சாப் என்ற கட்சியின் தலைவர் ஆவார்.

63 வயதாகும் இவர், கடந்த 1995-ஆம் ஆண்டு ஜெமிமா கோல்டுஸ்மித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்த திருமண உறவு 2004 -ஆம் ஆண்டில் முடிவுற்றது. முதல் மனைவிக்கு இரண்டு மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் கடந்த 2015ம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் ரெஹம் கானை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் இருவருக்கும் விவாகரத்து ஆனது.

இந்நிலையில் தற்போது மரியம் என்ற பெண்ணை இவர் திருமணம் செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இம்ரான் கானுக்கு மத ரீதியிலான ஆலோசனைகள் வழங்கும் புஷ்ரா என்பவரின் சகோதரியே மரியம் என்று கூறப்படுகிறது.

SHARE