திரைப்படம் ஒன்றின் நடனக் காட்சிக்காக பயன்படுத்தப்பட்ட மூன்று யுவதிகளை ஒத்திகை நிகழ்வின் போது நிர்வாணமாக நடனமாட வைக்க முயன்ற திரைப்பட இயக்குனர் என கூறிக்கொள்ளும் நபர் ஒருவரையும் அவரது மனைவியையும் பண்டாரகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நடன ஆசிரியர் என குறித்த நபர் தன்னை அடையாளப்படுத்தியுள்ள போதும் அவர் ஒரு மேலதிக நேர வகுப்பு ஆசிரியர் எனக் கூறப்படுகின்றது.
இந் நிலையில் குறித்த நபர் விளம்பரம் செய்து நாட்டிய காட்சியொன்றில் நடிக்க மூன்று யுவதிகளையும் இளைஞர் ஒருவரையும் தெரிவு செய்துள்ளார்.
பின்னர் அவர்களுக்கு நடனப் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் உடல் கட்டமைப்பையும் அங்க அசைவுகளையும் துல்லியமாக அவதானிக்க வேண்டும் என தெரிவித்து குறித்த நபர் இவர்களை நிர்வாணமாக நடனமாட வைக்க முயன்றுள்ளார்.
இதனை நிராகரித்துள்ள குறித்த யுவதிகளும் இளைஞரும் அங்கிருந்து தப்பிச் சென்று பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே சந்தேக நபரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.