மெக்சிகோவிலுள்ள மதுசார தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மெக்சிகோவின் தலைநகர் மெக்சிகோ சிட்டியில் நேற்று (திங்கட்கிழமை) மாலை மதுசார தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் பாரிய தீவிபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இதன் போது தொழிற்சாலையிலுள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் ஒருவர் எரிகாயங்களுக்கு உட்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையைச் சூழ புகைமூட்டம் ஏற்பட்டுள்ளதுடன் தீ, வான்வரை சுடர்விட்டு எரிந்ததாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.