மெய்யான சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதி தலைமையில் ஆட்சி அமைப்பார்கள் – மஹிந்த அமரவீர

233
மெய்யான சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதி தலைமையில் ஆட்சி அமைப்பார்கள் - மஹிந்த அமரவீர

மெய்யான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆட்சி அமைப்பார்கள் என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பல்வேறு வழிகளில் தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் என்ற ரீதியில் தாமும், கட்சியின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கட்சியின் ஐக்கியத்தை நிலைநாட்டுவதில் கூடுதல் கரிசனை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் கட்சியை ஐக்கியப்படுத்தி ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டும் நோக்கில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

SHARE