ஓய்வு பெற்ற மேஜர் கமால் குணரட்னவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அடையாள அட்டையை கொழும்பில் ஒப்படைக்குமாறு தாம் உத்தரவிட்டிருந்ததாகவும் எனினும், இந்த அடையாள அட்டை குணரட்னவிடம் இருப்பது அண்மையிலேயே தமக்கு தெரிய வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடையாள அட்டையை ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்ட நிலையில் அவர் எவ்வாறு அடையாள அட்டையை வைத்திருக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ள அவர் 2009ம் ஆண்டில் தமது உத்தரவுகளை ஏற்றுக் கொண்டு செயற்படாமைக்காக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். பிரபாகரனினின் சடலம் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அடையாள அட்டையை கொழும்பில் ஒப்படைக்குமாறு தாம் உத்தரவிட்டிருந்ததாகவும் எனினும், இந்த அடையாள அட்டை குணரட்னவிடம் இருப்பது அண்மையிலேயே தமக்கு தெரிய வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடையாள அட்டையை ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்ட நிலையில் அவர் எவ்வாறு அடையாள அட்டையை வைத்திருக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ள அவர் 2009ம் ஆண்டில் தமது உத்தரவுகளை ஏற்றுக் கொண்டு செயற்படாமைக்காக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். பிரபாகரனினின் சடலம் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.