மே 18ஆம் திகதி இடம்பெறவுள்ள இரா­ணுவ வெற்றி தினத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை .

251
மே18 - இரா­ணுவ வெற்றி தினத்தில் மஹிந்தவுக்கு அழைப்பில்லை! குளோபல் தமிழ் செய்தியாளர்:-

மே 18ஆம் திகதி இடம்பெறவுள்ள இரா­ணுவ வெற்றி தினத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற மைதானத்தில் நடை­பெற­வுள்ள இந்த விழாவில் இம்­முறை அவர் கலந்­து­கொள்ள முடி­யாது என பாது­காப்பு அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரிபால சிறி­சேன தலை­மையில் அமை­தி­யான முறையில் இம்­முறை வெற்றி தினம் கொண்­டா­டப்­படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்­பிட்­டது.இந்த தகவலை பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இதில் அர­சியல் மேடை­க­ளுக்கு எந்த அனு­ம­தியும் இல்லை என்பதனாலேயே அழைக்கப்படவில்லை என்றும் இம்­முறை இரா­ணுவ வெற்றி தினத்தில் யுத்­தத்தில் உயிர் நீத்த இரா­ணுவ வீரர்­க­ளுக்கு நினைவு அஞ்­சலி செலுத்­தவும், இரா­ணுவ வீரர்­களை கௌர­வப்­ப­டுத்துவதற்குமான நிகழ்­வு­களும் நடை­பெறும் என்றும் கூறிய அவர் அதை தவிர எவ­ரது புகழும் இதில் பறை­சாற்­றப்­ப­டாது என்றார்.

அத்துடன் எளி­மை­யான வகையில் இரா­ணுவ வெற்றி தினத்தை கொண்­டா­டுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அனா­வ­சி­ய­மான செல­வுகள், அனா­வ­சி­ய­மான விளம்­ப­ரங்கள் அனைத்­தையும் நாம் நிரா­க­ரித்­துள்ளதாகவும் கூறினார்.

அத்துடன் இன ஒற்­று­மை­யையும், நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்படுத்தும் வகையில் செயற்பட தயாராகியுள்ளதாகவும்  அதை குழப்பும் எந்த நடவடிக்கைக்கும் அரசாங்கம் இடமளிக்காது என்றும் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன மேலும் தெரிவித்தார்.

SHARE