மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தால் தனக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

430

 

மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தால் தனக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்‌ஷ, தான் ஆடம்பர மாளிகைகளை பயன்படுத்தினார் எனத் தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ளதுடன் ஜனாதிபதி செயலக வாகனங்கங்களை நிறுத்துவதற்காக உத்தியோக பூர்வமாக ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்தே அவை மீட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

maithri vs mahinda  z_p03-President

 

சமீபத்தில் தொலைக்காட்சி பேட்டியான்றில் ஜனாதிபதி செயலகத்திற்கு 100,000 மில்லியன் ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது எனினும் உண்மையில் 2.7280 மில்லியனே ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். தனது பாவனைக்கு அதிநவீன வசதிகளுடனான விமானமொன்றுக்கு உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுவதயும் அவர் நிராகரித்துள்ளார். சிறிலங்கன் எயர்லைன்ஸ் புதிய எயர்பஸ் ஒன்றிற்கு உத்தரவிட்ட வேளை அந்த விமானத் தயாரிப்பு நிறுவனம் முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்கான விசேட தொகுதியை அன்பளிப்பாக வழங்கியது. அதனை தேவைக்கேற்ப பொருத்தலாம், மாற்றலாம்.

இதன் பெறுமதி 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனினும் அவர்கள் அதனை இலவசமாக வழங்கினர், எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் எனது பாவனைக்காக பல வீடுகளை கட்டியது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயல்கின்றனர். அலரிமாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம்,கண்டி மற்றும் நுவரெலியாவிலும் உள்ள இல்லங்களை இலங்கை அரச தலைவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

அனுராதபுர, மஹியங்கனை போன்ற பகுதிகளில் உள்ளவை முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவினால் கட்டப்பட்டவை. அலரிமாளிகையும், ஜனாதிபதி செயலகமும் பொது மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்படும் என பத்திரிகையொன்றில் செய்தி வெளியாகியிருந்தது. நான் ஜனாதிபதியாக பதவி வகித்தவேளை ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் அங்கு வந்து சென்றுள்ளனர். – எனவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE