மைத்திரியின் ஆட்சிக்காலத்தில் சமூக சேவை உத்தியோகஸ்தர் சச்சிதானந்தம் மதிதயன் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு குற்றவாளிகளை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்குமாறு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. (கானொளிகள் இணைப்பு)

366
மைத்திரியின் ஆட்சிக்காலத்தில் சமூக சேவை உத்தியோகஸ்தர் சச்சிதானந்தம் மதிதயன் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு குற்றவாளிகளை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்குமாறு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மண்டூரில் சமூக சேவை உத்தியோகத்தரின் கொலைச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவி த்துள்ளது.

கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவிய லாளர் மாநாட்டில் கட்சியின் உறுப்பினர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பி. அரியநேந்திரன், சீ. யோகேஸ்வரன், பொன். செல்வராசா உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்ட சமூக சேவை உத்தியோகத்தரின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். நீண்ட காலத்துக்கு பின்னர் மட்டக்களப்பு பகுதியில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பணிபுரியும் சமூக சேவை உத்தியோகத்தர் மதிதயான் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமானது பொதுமக்கள் மத்தியில் மீண்டுமொரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் நல்லாட்சி ஏற்படுள்ளதாக கூறப்படும் இக்கட்டத்தில் நடைபெற்ற இச்சூட்டுச் சம்பவமானது தமிழ் மக்கள் மத்தியில் பல சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.

உண்மையில் சம்பவத்தின் சூத்திரதாரிகள் குறித்தும், சம்பவம் இடம்பெற்றதற்கான காரணங்கள் குறித்தும் உடனடியாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச உணர்வை போக்க வேண்டியது பாதுகாப்பு தரப்பினரின் பொறுப்பாகும் என அவர்கள் தெரிவித்தனர்.

சமூக சேவை உத்தியோகஸ்தர் சச்சிதானந்தம் மதிதயான் (வயது 44) சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் குற்றவாளிகளை ஒரு வாரத்துக்குள் கைதுசெய்யாவிடின் பொதுமக்களுடன் இணைந்து வெகுஜன போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா மேலும் தெரிவித்தார்.

SHARE