மைத்திரியின் செயலால் மனம் குளிர்ந்த மஹிந்த : ஆனாலும் ஒரு கோரிக்கை

133

 

ஊவா வெல்லஸ்ஸ புரட்சியின் போது பிரித்தானியர்களால் தேசத்துரோகிகளாக பெயரிடப்பட்ட 82 பேரும் தேசிய வீரர்களாக பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரித்தானியர்களால் தேசத்துரோகிகளாக பெயரிடப்பட்ட 82 பேரையும் தேசிய வீரர்களாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் கையொப்பமிட்டார்.

இந்த நிலையில், வாரியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கு மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

நாட்டின் தேசத்துரோகிகள் என்று வெள்ளையர்களால் அறிவிக்கப்பட்ட அனைவரும் இன்று தேசிய வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரியதாகும்.

இதேபோல அவர்களிடம் இருந்து கைவிட்டுப்போன பரம்பரை சொத்துக்கள் மீள கையளிக்க வழிச் செய்யப்பட வேண்டும் என்று மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கையொன்றையும் முன்வைத்துள்ளார்.

SHARE