மைத்திரியை கொலை செய்ய ரணில் திட்டம்!

212

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்வதற்கான சதிநடவடிக்கையின் பின்னணியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே இருக்கிறார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களின் அணி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான, டிலான் பெரேரா, எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் கூட்டாக இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியிலிருந்து தப்பித்து கொள்ளவே இவ்வாறு ரணில், மைத்திரியைக் கொலை செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கட்டுப்பாட்டிலேயே பொலிஸ் திணைக்களம் இயங்குகின்றது. இந்நிலையில், ஜனாதிபதி தன்னை பாதுகாத்துக்கொள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும்.

ஆகையினால், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், சட்டம் ஒழுங்கு அமைச்சை, தன்னுடைய பாதுகாப்பு அமைச்சின் ​கீழ் கொண்டுவர வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

SHARE