ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு புதிதாக இரண்டு அங்கத்துவ அட்டைகள் அறிமுகம் செய்ய கட்சி தீர்மானித்துள்ளது.
வாழ்க்கையில் ஒரு தடவை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டிய வாழ்நாள் அங்கத்துவ அட்டை மற்றும் வருடாந்தம் புதுப்பித்துக் கொள்ளக்கூடிய அட்டை என இரண்டு பிரிவுகளில் இந்த அங்கத்துவ அட்டை அறிமுகம் செய்யப்படவுள்ளது.
முதல் கட்டமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அங்கத்துவ அட்டைகள் விநியோகம் செய்யப்படவுள்ளது.
கட்சிக்கு புதிய உறுப்பினர்களை இணைக்கும் நாடு தழுவிய திட்டமொன்றின் அடிப்படையில் இவ்வாறு அங்கத்துவ அட்டை விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.