மோடியின் கவனத்தை ஈர்க்க யாழில் ஆர்ப்பாட்டம்

440

 

20150314_100308-720x480யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் காணமால் போன தமது உறவுகளை மீட்டுத் தாருங்கள், மீள் குடியேற்றம், இந்திய மீனவர்களின் பாதிப்பில் இருந்து காப்பாற்றுங்கள், அரசியல் கைதிகளை விடுவிக்க அழுத்தம் கொடுங்கள் போன்ற பதாதைகளை ஏந்தியவாறு அமைதியாக தமது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வார்ப்பாட்டத்தில் யாழ் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு சங்கம் இணைந்து கொண்டிருந்தது. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் மோடி இரண்டாம் நாளான இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு இந்திய நிதியுதவில் நிர்மாணிக்கப்படும் வீட்டுத்திட்டத்தை மக்களின் பாவனைக்கு கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

20150314_100308-720x480 20150314_1005451 20150314_1008111 20150314_1018561 20150314_1022091 20150314_1022211

SHARE