ஈட்டி, கணிதன் போன்ற தரமான படங்கள் மூலம் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்ற பெயர் பெற்று வருகிறார் அதர்வா. இவர் அடுத்து பாணா காத்தாடி பட இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்க இருப்பது நாம் அனைவரும் அரிந்த விஷயம்.
இந்நிலையில் இவர் இப்படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவல்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
மணிரத்னம், கார்த்தி, சாய் பல்லவி படத்தின் வேலைகளை முடித்துவிட்டு இப்படம் பற்றி அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மணிரத்னம் தமிழ் சினிமாவில் முரளி நடித்த பகல் நிலவு என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.