யாரையும் பழிவாங்குவதற்காக சர்வதேச விசாரணையை கோரவில்லை- தர்மலிங்கம் சித்தார்தன்

254

யாரையும் பழிவாங்குவதற்காக சர்வதேச விசாரணையை கோரவில்லை- தர்மலிங்கம் சித்தார்தன்- 

தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகள் தொடர்பான உண்மையை வெளிக்கொணர்வதற்காகவே சர்வதேச விசாரணையை கோருவதாகவும் யாரையும் பழிவாங்குவதற்காக அல்ல என்று யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் தலைவருமான சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
கடந்து வந்த அரசாங்கம் எமது பிரச்சினையை தீர்க்க முன்வராததினாலேயே அதனை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையை கண்டறியும் விசாரணைகளின் மூலம் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதுடன் பிரச்சினைகளுக்கான அடிப்படைகளையும் கண்டறியலாம் என்றும் அவர் வலியுறுத்துகிறார்
உள்ளக விசாரணையில் வெளிநாட்டு உள்ளீடுகள் பரிந்துரைக்கப்பட்டபோதும் எமது மக்கள் இந்த விசாரணையை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறிய அவர் அதற்கு அரசு பெரும்பான்மையின ஆதரவாக நடப்பதே காரணம் என்றும் கூறினார்.
குறிப்பாக மக்கள் மத்தியில் அமைதி உருவாநிம்பிக்கையொன்று ஏற்பட்டபோதும் காணிகளும் விடுவிக்கப்படவில்லை கைதிகளும் விடுவிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
உள்ளக விசாரணை குறித்து தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த விரும்பினால் காணிகளையும் கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
SHARE