யார் இந்த பேரறிவாளன்? எங்கிருந்து வந்தார்? ஏன் சிறைவாசம் அனுபவிக்கின்றார்? அப்படி என்ன குற்றம் செய்தார்? எப்போது விடுதலையாவார்? இவருடைய விடுதலையைப் போன்றே இவர் பற்றிய கேள்விகளும் நீண்டு கொண்டே செல்கின்றன.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரில் ஒருவரே இந்த தமிழ் மகன்.
விசாரணைக்காக 1991ஆம் ஆண்டு அழைத்துச் சென்ற பேரறிவாளனின் வாழ்வு அன்றுடன் அஸ்தமனமானது. அன்றிலிருந்த இன்றுவரை அவர் வாழ்வில் சந்தித்த துயரங்கள் எண்ணிலடங்காதவை….