யார் யார் நெய் ஊற்றி சாப்பிடக்கூடாது தெரியுமா?

183

தோசை முதல் பருப்பு சாதம் வரை அனைத்திலும் நெய் ஊற்றி சாப்பிடுவதே அலாதி சுவையினை தரும். இனிப்புகளில் சேர்க்கப்படும் சுத்தமான பசு நெய் அதற்கு சுவையினையும் மணத்தையும் தருகிறது.

நெய் ஊற்றி சாப்பிட்டால் உடலில் கொழுப்பு சேரும் என கூறுவர். ஆனால் இது முற்றிலும் தவறான கருத்து. சுத்தமான பசு நெய் உடலுக்கு நன்மை தருகிறது.

நெய்யுடன் கலக்கப்படும் எருமையின் நெய்யானது உடலில் கொழுப்பினை அதிகரித்துவிடும். சுத்தமான பசு நெய் மணல் மணலாக நல்ல மணத்துடன் இருக்கும்.

நெய்யுடன் தாவரஎண்ணெய், வனஸ்பதி போன்ற கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது. எனவே சுத்தமான நெய்யினையே உபயோகிக்க வேண்டும்.

ஒரு வயது குழந்தை முதல் ஐம்பது வயது பெரியோர் வரை அனைவரும் நெய்யினை சேர்த்து கொள்ளலாம்.

எப்படி சாப்பிடவேண்டும்?

சாப்பாட்டின் முதல் கவளத்திலேயே பிசைந்து சாப்பிடவேண்டும். நெய்யில் கட்டாயம் உப்பு சேர்க்காமல் சாப்பிடவே கூடாது.

எண்ணெய்க்கு பதில் நெய் உபயோகித்து தோசை வார்த்தால் அதில் சிறிது மட்டுமே உபயோகிக்கவேண்டும்.

மதிய உணவில் மட்டுமே சிறிது நெய்யினை சேர்த்து கொள்ளவேண்டும். இரவில் நெய் சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.

சூடான சமைத்த உணவில் மட்டுமே நெய்யினை சேர்த்து சாப்பிடவேண்டும். பிரிட்ஜில் வைத்த உணவுகளில் நெய் சேர்த்து சாப்பிடக்கூடாது.

பிரியாணி, சிக்கன், மட்டன், முட்டை, மீன் போன்ற அசைவ உணவுகளில் கட்டாயம் நெய் சேர்க்கக்கூடாது. சேர்த்தால் செரிமான பிரச்சனைகள் உண்டாகும்.

செரிமான பிரச்சனை, வாயு கோளாறு, வாந்தி வரும் உணர்வு இருப்பவர்கள் நெய் ஊற்றி சாப்பிடுவதனை தவிர்க்கவேண்டும்.

நெய் சேர்த்து சாப்பிடவேண்டிய உணவுகள்

பாசிப்பருப்பு, துவரம் பருப்புடன் நெய் சேர்த்து பயன்படுத்தலாம். பருப்பில் உள்ள புரதத்துடன், கொழுப்பு சேர்ந்து குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தினை அளிக்கும்.

சாம்பார் தாளிக்க, புளிக்குழம்பு, கூட்டு போன்றவற்றுடன் பயன்படுத்தலாம். சூடான அரிசி சாதத்துடன் சேர்த்து உண்ணலாம்.

நட்ஸ் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். பாயசன் அல்வா, கேசரி போன்ற உணவுகளில் இதனை சேர்க்கலாம்.

பலன்கள்

நாட்டுப்பசுவின் நெய்யில் சாச்சுரேட் கொழுப்பானது நிறைந்துள்ளது. இது உடலுக்கு நன்மை தரும்.

உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலின் அளவினை அதிகரித்து இரத்தத்தில் படியவிடாது.

மூளை நரம்புகளை சுறுசுறுப்பாக்கும் ஊக்கியாக செயல்படுகிறது. மூளையின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது.

அல்சீமர், மன அழுத்தம், செரிப்ரல் அட்ராபி என்னும் மூளை தொடர்பான பிரச்சனை போன்றவைகளுக்கு தயாரிக்கப்பயன்படும் ஆயுர்வேத மருந்துகளில் பசுநெய் முக்கிய பொருளாக சேர்க்கப்படுகிறது.

SHARE