யாழில் சீரற்ற ரயில் கடவையால் பொதுமக்கள் அவதி

310
யாழ்ப்பாணத்தில் நகரை அண்டி காணப்படும் ரயில் கடவைகள் சில, சீரற்ற நிலையில் இருப்பதனால் அவற்றினூடாக பயணிப்பவர்கள் பெரிதும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக யாழ் மாநகரசபைக்குட்பட்ட பிறவுண் வீதியையும் பலாலி வீதியையும் இணைக்கும் அன்னசத்திர வீதியிலுள்ள ரயில் கடவையானது மிகவும் சீரற்ற நிலையில் காணப்படுகின்றது. அருகில் இரண்டு பிரதான வீதிகளும் பாடசாலைகளும் இருப்பதனால் குறித்த வீதி அதிகமானவர்களின் பயன்பாட்டிற்குரியதாக உள்ளது.

மேற்படி ரயில் கடவை சீரற்ற நிலையில் இருப்பதனால் இப்பாதையினூடாக  இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் அனைவரும் இவ்விடத்தில் இறங்கியே செல்லவேண்டியுள்ளது.

முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட ஏனைய வாகனங்களும் இப்பாதையில் பயணிப்பது மிகவும் கடினமாக உள்ளதாகவும் இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இதை புகையிரத திணைக்களம் கவனத்திற்கொண்டு உடனடியாக இக்கடவையை சீரமைத்து தருமாறும் இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

SHARE