யாழ்.கொடிகாமம் பகுதியில் கேரள கஞ்சா கொண்டு செல்ல முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 8 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேகநபர்கள் இருவரும் மோட்டார் வாகனத்தில் பயணித்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகளுக்கு இருவரும் ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்க முயற்சித்துள்ளார்கள் என்றும், அதை நிராகரித்த பொலிஸ் அதிகாரிகள் அவர்களை உடனடியாக கைது செய்துள்ளார்கள் என்றும் பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.