யாழ்.கொழும்புத்துறையில் 55 மதுபான போத்தல்களுடன் புலிக்குட்டி கைது

325

 

யாழ்.கொழும்புத் துறை பகுதியில் சட்டத்திற்கு மாறாக விடுமுறை தினத்தில் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை மதுபான போத்தல்களை யாழ்.பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், குறித்த மதுபானங்களை மறைத்து வைத்திருந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்புத்துறைப் பகுதியில் சட்டவிரோதமாக அதிகளவான சாராய போத்தல்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவரை கைது செய்துள்ளதாக யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.சிறிகஜன் தெரிவித்துள்ளார்.

கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த புலிகுட்டி என அழைக்கப்படும் தர்மலிங்கம் தர்மகுலராஜா (44 வயது) என்பவரே இவ்வாறு நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நபரொருவர் தனது உடமையில் பத்துப் போத்தல் சாராயத்தையே வைத்திருக்க முடியும். ஆனால் குறித்த நபர் தமது உடமையில் 55 சாராய போத்தல்களை வைத்திருந்தமையாலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் நேற்றும் இன்றும் மதுபானசாலைகள் திறக்கப்படாமையால் அதன் போது இப் போத்தல்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காகவே
வைத்திருந்ததாகவும் விசாரனையில் தெரிய வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த நபர் ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு ஒரு  இலட்சத்தி ஜம்பதாயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்தியிருந்ததுடன், 6 மாத கால கடுழீய சிறைத் தண்டனையும் பெற்றிருந்தார்.

அத்துடன் மேலும் ஒரு குற்றத்துக்காக நீதிமன்றால் 300 மணித்தியாலங்கள் நற்பணி செய்வதற்கு பணிக்கப்பட்டிருந்ததாகவும் இருந்த போதிலும், அதுவும் இன்னமும் செய்யப்படாத நிலையில் நேற்று முன்தினம் இக்குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE