யாழ்.சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்ட இந்திய மீனவர்கள்

329

 

இந்திய மீனவர்கள் 51 பேர் அவர்களை விடுதலை செய்யுமாறு  வலியுறுத்தி யாழ்.சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள்.

குறித்த மீனவர்கள் இன்று காலை முதல் தமது உண்ணாவிரதத்தினை ஆரம்பித்துள்ளார்கள்.

கடந்த தினங்களில் பருத்தித்துறை மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட குறித்த 51 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், பண்டிகைக் காலங்கள் வருகின்ற காரணத்தினால் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தினை இவர்கள் முன்னெடுத்து வருகின்றார்கள்.

இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் நடராஜா மற்றும் இந்திய துணைத் தூதுவர் அலுவலக அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதாகவும், உண்ணாவிரதத்தினை நிறுத்துமாறும் இந்திய மீனவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இருந்தபோதிலும் உண்ணாவிரதத்தினை நிறுத்துவதற்கான தீர்மானத்தினை இந்திய மீனவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாழ்.சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்ட இந்திய மீனவர்கள்

யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்கள் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு தம்மை விடுதலை செய்யுமாறு கோரி, இன்றைய தினம் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை மேற்கொள்ள முயன்றிருந்த நிலையில் இந்தியத் துணை தூதரகம் தலையிட்டு உண்ணாவிரதத்தை நிறுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் இலங்கையின் யாழ் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் இடுபட்ட குற்றச்சாட்;டில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு 56 இந்திய மீனவர்கள் யாழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் தம்மை கிறிஸ்மஸ் மற்றும் புதவருட தினத்தையொட்டி மன்னிப்பளித்து விடுதலை செய்யுமாறு கோரி நேற்றைய தினம் சிறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இருந்த போதிலும் குறித்த மீனவர்களுடன் யாழ் இந்திய துணைத்தூதுரக அதிகாரிகள் நேரில் சென்று கலந்துரையாடியிருந்துடன், விரைவாக உங்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தனர்.

இதற்கமைய மீனவர்களும் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டதாக யாழ் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கைது செய்யப்பட்டு சிறைகளில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களில் ஒரு பகுதியினரை விடுதலை செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE