யாழ் தெல்லிப்பழை பொலிஸாரின் மற்றுமொரு அடாவடி

156

1688764346318707775police-women2

யாழ் தெல்லிப்பழை பொலிஸாரின் மற்றுமொரு அடாவடி கடந்த 22 ம் திகதி இரவு 11.45 மணியளவில் அளவெட்டி கும்பிளாவளையடி பகுதியில் நீதீமன்ற வழக்குகளுக்கு சமூகமளிக்காத காரனத்துக்காக தெல்லிப்பழை பொலிசாரினால் ஓருவரை கைது செய்ய சென்ற வேளை அவரின் வீட்டிற்குள் அடாவடியாக நுலைந்து தகாத வார்தைகளை பிரயோகித்து வீட்டின் உறிமையாளரை அவரின் ஆடையை பற்றி இழுத்து எந்த கேள்வியும் இன்றி தகாத வார்த்தையில் பேசி மிரட்டியுள்ளனர்.

ஆனால் அவர்கள் தேடிய நபர் வேரு அவரை வந்த பொலிசாருக்கு நன்கு தெரியும் அப்படி இருந்தும் இரவில் பெண்கள் இருக்கும் வீட்டில் தமது அடாவடித்தனத்தை காட்டியுள்ளார்கள் யாழ் தெல்லிப்பழை பொலிசார் அது மட்டுமன்றி அந்த பொலிஸ் குழுவிற்கு தலைமை தாங்கி வந்த இரண்டு நட்சதிர பதவியுடையவர் உட்பட சாஜன்,கான்ஸரபில் சிவில் பொலிசார் என அனைவரும் நிலத்தில் நிற்க முடியாமல் மெய்மறந்த மது போதையில் இருந்துள்ளனர்.

அவர்கள் இந்த நிலையிலேயே ஆயுதத்தையும் கொண்டு வந்துள்ளனர் அதில் எமது தலை நிமிர்த இனமாகிய இரண்டு தமிழினத்தவர்களும் இவர்கள் அந்த பகுதியில் மக்களுக்கு நன்கு பரீட்சையமானவர்கள் இந்த பொலிஸ் குழுவே அளவெட்டி பகுதி அம்பனை பகுதியில் வெளிநாட்டவர்களிடம் தமது சண்டித்தனத்தை காட்டியவர்கள் இதில் மல்லாகம் நீதீமன்ற சார்ஜன் இருவரும் அடங்குவர்.

இரவு 11.45 மணிக்கு பொலிஸார் ஒரு வீட்டிற்கு செல்லவேண்டிய அவசியம் என்ன? என பாதிக்கப்பட்ட நபர் எமது ஊடக பிரிவிற்கு அறிவித்துள்ளார் இவ்வாறு செயற்படும் பொலிஸாரினால் எமது மக்கள் மென்மேலும் பொலிஸாரை தரக்குறைவாகவே பார்க்க நேரிடும் இது சம்பந்தாமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவணத்தில் எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

SHARE