
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில், கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு நேற்றைய தினம் சம்பிரதாயப் பூர்வமாக இடம்பெற்றது.
இதன்படி, நல்லூரிலுள்ள செங்குந்தர் மரபினர் வருடா வருடம் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையை வழங்கி வருவருகின்ற நிலையில், யாழ். சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நேற்று காலை கொடிச்சீலை கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகியுள்ளது.
தொடர்ந்தும் 25 தினங்கள் காலை மாலை உற்சவங்களாக இடம்பெறவுள்ள இவ்வாலயப் பெருந்திருவிழாவில் பத்தாம் திருவிழாவான அடுத்த மாதம் 06ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 05 மணிக்கு மஞ்சத் திருவிழாவும்,
12ம் திகதி திங்கட்கிழமை இரவு 07 மணிக்கு அருணகிரிநாதர் உற்சவமும், 15ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 07 மணிக்குச் சூர்யோற்சவமும், அதேதினம் மாலை 05 மணிக்கு கார்த்திகை உற்சவமும் நடைபெறவுள்ளது.
மேலும்,16 ம் திகதி புதன்கிழமை காலை- 07 மணிக்குச் சந்தான கோபாலர் உற்சவமும், அதே தினம் மாலை 05 மணிக்கு கைலாசவாகன உற்சவமும், 17ம் திகதி வியாழக்கிழமை காலை 07 மணிக்கு கஜவல்லி மஹாவல்லி உற்சவமும், அதேதினம் மாலை 05 மணிக்கு வேல்விமான(தங்கரதம்) உற்சவமும்,
18ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 07 மணிக்குத் தண்டாயுதபாணி உற்சவமும், அதேதினம் மாலை 05 மணிக்கு ஒருமுகத் திருவிழாவும், 23 ம் திருவிழாவான 19 ம் திகதி சனிக்கிழமை மாலை 05 மணிக்குச் சப்பறத் திருவிழாவும், 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 07 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் 21ம் திகதி காலை 07 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.