யாழ்.நீதிமன்ற வீதியில் பதற்றம் உக்கிரமடைந்துள்ள நிலையில், துப்பாக்கிப் பிரயோகம் நடத்துமாறு பொலிஸாருக்கு யாழ்.நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
புங்குடுதீவு கொலைச் சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்படவுள்ள நிலையில், பாதுகாப்பு நிமித்தம் பொலிஸார் நீதிமன்ற வீதியில் தடை ஏற்படுத்தியுள்ளனர்.இதனைக் கண்டித்து நீதிமன்றத்தின் மீதும் பொலிஸார் மீதும், இளைஞர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.நீதிமன்ற வீதியில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், கலகத்தில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.பிரதேசத்தில் கலகத் தடுப்பு பொலிஸாரும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இளைஞர்களின் கல்வீச்ச தாக்குதலில் மூன்று பொலிஸார் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற சூழ்நிலையையடுத்து, 25 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
முற்போக்கு தமிழ்த் தேசிய முன்னணியின் செயலாளர் நாயகம் சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட 25 பேர், இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த விஜயகாந் என்னும் நபர் ஈ.பி.டி.பி கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட கொள்ளைக்குழுவின் தலைவன் ஆவான்.