யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 31ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா சம்பிரதாய மரபு ஒழுங்குகளிற்கு அமைவாக சிறப்பாக இன்று (19) நடைபெற்றது.
இந்த பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறுவதுடன் பல்கலைக்கழக வேந்தர் சிரேஷட பேராசிரியர் சி.பத்மநாதன் மாணவர்களுக்குரிய பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.
இன்றைய அமர்வானது முற்பகல் 9 மணிக்கு ஆரம்பமாகியது. இதில் முதலாவது அமர்வில் 170 மாணவர்களுக்கும் முற்பகல் 10.45 மணிக்கு ஆரம்பமாகும் 2 ஆவது அமர்வில் 193 மாணவர்களுக்கும். பிற்பகல் 1.45 மணிக்கு ஆரம்பமாகும் 3 ஆவது அமர்பில் 196 மாணவர்களுக்கும் 3.30 மணிக்கு ஆரம்பமாகும் 4 ஆவது அமர்வில் 201 மாணவர்களுக்கான பட்டங்களும் வழங்கப்பட்டன. இன்றும் நாளையும் (20) நடைபெறும் இப்பட்டமளிப்பு விழாவில் சுமார் 1939 மாணவர்கள் பட்டங்களை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.