யாழ் மாவட்டத்தில் மூவாயிரம் வீடுகளின் புனரமைப்பிற்கு உதவிகள்

290

யாழ் மாவட்டத்தில் மூவாயிரம் வீடுகளுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் உதவிகள் வழங்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டு முழுமையடையாத நிலையில் இருக்கும் மூவாயிரம் வீடுகளின் சுவா்களுக்கு பூச்சு வேலைகளை மேற்கொள்வதற்கு உதவியாக தலா பத்து சீமெந்து பைகள் வழங்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

யாழ் மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இந்த உதவிகள் உரிய பயணாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

vashthu veedu

SHARE