யுத்தக் குற்றச் செயல் பொறிமுறைமை குறித்து ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சிக் கூட்டம்

271

யுத்தக் குற்றச் செயல் பொறிமுறைமை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சர்வகட்சிக் கூட்டமொன்று இன்றைய தினம் நடத்தப்பட உள்ளது.

யுத்தக் குற்றச் செயல்கள் விசாரணைப் பொறிமுறைமையை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் பேசப்பட உள்ளது.

21 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றக உள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்க , எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் உள்ளி;ட்ட பலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். ஒவ்வொரு அரசியல் கட்சியைச் சேர்ந்த மூன்று பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

SHARE