மன்னார் நகர் நிருபர்
மன்னார் மாவட்டத்தில் குடும்ப நல பணியகத்தின் அனுசரனையுடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிதியுதவியுடன் மன நலம் தொடர்பான நடை பவனி ((21-8-2018) இன்று காலை 8.30மணியளில் மன்னார் கச்சேரிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்கள் ஏதோ வகையில் உளம் சார்ந்த பிரச்சினைக்குள்ளாகின்றார்கள் உடல் நோயை கவனித்து வரும் மக்கள் தங்கள் உளம் சார்ந்தபிரச்சினையை கவனிப்பதே இல்லை. இதனால் தற்கொலைகள் வடக்கு, கிழக்கு மாகாணங்கில் அதிகரித்துள்ளது. எனவே மக்கள் மனநலம் மற்றும் உளவியல் சார்ந்த விடயங்களில் விழிப்புண்வு எற்ப்படுத்தும் வகையில் குறி்த நடைபவனி ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது
மன்னாரில் ஆரம்பிக்கபட்ட நடை பவனியானது ஆறு நாட்களாக நடைபெற்று (26-08-2018) ஞாயிற்றுக்கிழமை வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடையும் வகையில் ஒழுங்கமைக்கபட்டுள்ளது. குறித்த நடை பவனியை வடக்கு மாகாண முதலமைச்சர் C.வ.விக்னேஷ்வரன் அவர்கள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் மற்றும் மன்னார் நகர தவிசாளர், குடும்ப நல பணியாளர்கள, மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட செயலாக ஊழியர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனார்.
இவ் நிகழ்வை ஆரம்பித்து உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் நீண்ட கால யுத்தத்துக்கு பின்னர் எதோ ஒரு வகையில் உளநல பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் எனவே இந்த மக்களை உளநல ரீதியில் சுகதேகியாக்க தங்கள் எடுத்த முயற்சிகளுக்கு அரசாங்கம் ஆதரவு வழங்கவில்லை எனவே விரைந்து பணியாற்றி இவ்வாறான உளநல பிரச்சினையால் பாதிக்கப்படடவர்களை சமுதாய நிரோட்டத்தில் இணைப்பது முக்கியம் எனவும் தெரிவித்தார்.
உளநல ரீதியில் பாதிக்க படடவர்களுக்காக சிகிச்சை அளிப்பதற்காக இந்தியாவில் இருந்து தமிழ் தெரிந்த நிபுணர்களை அழைத்து வருவதற்கு எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.



