யுத்தம் மீண்டும் தலைதூக்குவதனை தடுக்க பேனையை பயன்படுத்துங்கள் – ஜனாதிபதி

246

யுத்தம் மீண்டும் நாட்டில் தலைதூக்குவதனை தடுக்க கலைஞர்கள் இலக்கியவாதிகள் பேனையை பயன்படுத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

யுத்தம் எல்லா சந்தர்ப்பங்களிலும் உண்மையை நிராகரித்து மனிதாபிமானத்தை சிதைத்து விடுவதாகத் தெரிவித்துள்ளார்.
யுத்தம் எந்த நேரத்திலும் இரத்தத்தை தேடி அலைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் பௌதீக வளங்களை மட்டும் அழிப்பதில்லை சமூகத்தின் நல்ல பண்புகள் சமூகப் பெறுமதிகளையும் விழுமியங்களையும் சேர்த்தே அழித்து விடுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அனைத்து இன சமூகங்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த கலைஞர்களும் இலக்கியவாதிகளும் முக்கிய பங்கினை ஆற்ற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE