யுத்த பாதிப்பால் வாழ்வாதாரம் இன்றி வாழம் குடும்பங்களுக்கு உதவிகள் இன்றைய காலத்தின் தேவையாகும். மன்னார் குரு முதல்வர் விக்ரர் சோசை அடிகளார்

373
யுத்த பாதிப்பால் வாழ்வாதாரம் இன்றி வாழம் குடும்பங்களுக்கு உதவிகள் இன்றைய காலத்தின் தேவையாகும். மன்னார் குரு முதல்வர் விக்ரர் சோசை அடிகளார்.
(தலைமன்னார் நிரபர் வாஸ் கூஞ்ஞ) 15.10.2015
யுத்தத்தால் பாதிப்படைந்து கணவர்களை பிள்ளைகளை தங்கள் உடல் அங்கங்களை இழந்தவர்கள் மேலும் புனர்வாழ்வு பெற்று வந்திருப்போர் சிறையில் அரசியல் கைதிகளாக வாடுவோர் குடும்பங்கள் ஆகியோருக்கு இன்று வழங்கும் இவ் உதவி இன்றைய காலத்தின் தேவையாகும் இதை உணர்ந்து செயல்படுத்தும் அமைச்சர் டெனிஸ்வரன் மற்றும் வடமாகாண சபைக்கும் நன்றி நவிழ்கின்றோம் என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஏ.விக்ரர் சோசை அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த கால யுத்ததத்தின்போது விதைவைகள் ஆக்கப்பட்ட அங்கவீனமானவர்கள் சிறையில் வாடும் குடும்பத்தினரின் வாழ்வாதார உதவிகள் வழங்கும் வைபவம் புதன் கிழமை (14) மன்னாரிலுள்ள வடமாகாண போக்குவரத்து கிராமிய அமைச்சின் உப அலுவலகத்தில் இடம்பெற்ற வைபவத்தில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஏ.விக்ரர் சோசை அடிகளார் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றுகையில்
வன்செயல் காலங்களில் பாதிப்படைந்த மக்களுக்கு உதவி செய்ய இப்பொழுது பலர் முன்வந்துள்ளனர். எங்களுக்கு இழைக்கப்பட்ட சம்பவங்களை விசாரனை செய்வதற்கு சர்வதேச நீதிமன்றங்களும் நீதிபதிகளும் விசாரனை செய்வதற்கு சர்வதேச சமூகம் ஆயத்தமாக இருக்கின்றனர். மக்களுக்கு இழைக்கப்பட்ட தவறுகளுக்கு ஈடுசெய்ய வேண்டும் என பலர் முனைப்புடன் இருக்கின்றனர்.
ஆகவே எங்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை ஒன்றுமே நடக்கவில்லை என்ற நிலைப்பாடடிலிருந்து நாம் மாற வேண்டும். எமக்கு பலர் பல காரியங்களைச் செய்துக் கொண்டிருக்கின்றனர். சிலவேளைகளில் அவர்கள் செய்வதை நாம் காணாமல் இருக்கலாம் இருந்தபோதும்  போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பார்கள் சிலர் நமக்கு ஏதோ செய்ய வேண்டும் என முற்படுகின்றார்கள் இந்த வகையில் அமைச்சர் டெனிஸ்வரன் பல தரப்பட்ட வகையில் பாதிப்படைந்திருக்கும் மக்களுக்கு தற்பொழுது வாழ்வாதார உதவி செய்ய முற்பட்டிருப்பது விரும்பத்தக்கதும் காலத்துக்கு ஏற்றதுமாகும்.
எங்கள் மன்னார் ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை ஆரம்பத்திலிருந்து இவ்வாரான செயற்பாடுகளை செய்து வருகின்றார். ஆயர் மூலம் பயன் பெறும் பல பயனாளிகளை நான் இந்த கூட்டத்தக்குள் பார்க்கின்றேன். இதற்கு நாம் அவருக்கு நன்றி கூறவேண்டும்.
ஆனால் இன்று அமைச்சு ரீதியாக வாழ்வாதார உதவிகள்  செயல்படுத்தப்படுகிறன. அமைச்சர் அமைச்சின் அதிகாரிகள் இவ் திட்டத்தை செயல்படுத்தகின்றபோது இதற்கான ஒத்துழைப்பை நாம் நல்க வேண்டும். அத்துடன் இவ் உதவி சரியான இடத்தில் பயன்படுத்த வேண்டும்.
நாம் எல்லாவற்றையும் கடந்த கால யுத்தத்தின்போது இழந்தவர்கள்தான் அது உண்மை. இன்றைய வீடுவாசல்கள் வாழ்வாதாரம் எல்லாம் சிறியதாக இருக்கலாம் ஆனால் சிறு துள்ளி பெரும் வெள்ளம் என்பார்கள். ஆகவே எமக்கு கிடைக்கின்ற வசதி வாய்ப்புக்களை நாம் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். இது காலத்தின் தேவையுமாகும். 2009ம் ஆண்டிலிருந்து இற்றைவரைக்கும் எத்தனையோ முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றபோதும் அமைச்சர் டெனிஸ்வரானால் எடுக்கப்பட்டிருக்கும் இன்றைய இவ் முயற்ச்சி பாரட்டுதலுக்குரியது.
யுத்தத்தால் பாதிப்படைந்து கணவர்களை பிள்ளைகளை தங்கள் உடல் அங்கங்களை இழந்தவர்கள் மேலும் புனர்வாழ்வு பெற்று வந்திருப்போர் சிறையில் அரசியல் கைதிகளாக வாடுவோர் குடும்பங்கள் ஆகியோருக்கு வழங்கும் இவ் உதவி மன்னார் மாவட்ட மக்களுக்கு மட்டுமல்ல நாட்டிலுள்ள இவ்வாறான மக்களுக்கு செய்வதற்கான நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
இதற்காக வடமாகாண முதலமைச்சரையும் நாம் பாராட்டி நிற்கின்றோம். இவ்வாறான திட்டத்தை அமுல் படுத்த ஒத்துழைத்த வடமாகான சபைக்கு நாம் நன்றி கூறுகின்றோம். நொந்து போய் இருக்கின்ற மக்கள் அடிமை தனத்தில் இருக்கின்ற மக்களை இறைவன் எப்பொழுதும் கைவிடுவதில்லை. மாறாக அவர் தனது இரக்கத்தை காட்டிக் கொண்டுதான் இருக்கின்றார் என தனது உரையில் இவ்வாறு தெரிவித்தார்.
SHARE