யோசிதவின் வழக்கு எதிர்வரும் 8ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

237
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மேல் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார். மஹிந்தவின் புதல்வரான யோசித்தவிற்கு பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணைக்காக இன்று மஹிந்த மேல்நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த மாதம் 25ஆம் திகதி கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட யோசித்தவை மார்ச் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

யோசிதவின் வழக்கு எதிர்வரும் 8ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

யோசிதவின் வழக்கு எதிர்வரும் 8ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

யோசிதவிற்கு பிணை வழங்க வேண்டாம் என சட்ட மாஅதிபர் திணைக்களம் கோரியிருந்தது.

இதன்படி, இன்றைய தினமும் யோசிதவிற்கு பிணை வழங்கப்படவில்லை.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவையும் ஒரே மேடையில் சந்திக்க மக்கள் விருப்பம் கொண்டிருப்பது தொடர்பில் எமது செய்தியாளர் வினவிய போது,

அது குறித்து பதிலளித்த மஹிந்த, அனைவரிடமும் பல ஆசைகள் உள்ளன. அவற்றை பற்றி பின்பு யோசிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்காமல் மஹிந்த ராஜபக்ஸ சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிணை மறுப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்சவை பிணையில் விடுதலை செய்து இடைக்கால உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, யோஷித்த ராஜபக்சவை விளக்கமறிலில் வைக்குமாறு உத்தரவிட்டு, கடுவலை நீதவான் வழங்கிய உத்தரவு பிணை தொடர்பான சட்ட ஏற்பாடுகளுக்கு முரணானது என கூறினார்.

இதனால், தமது தரப்பு வாதிகளை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைத்திருக்க முடியாது எனவும் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு முடியும் வரை தமது தரப்பு வாதிகளை பிணையில் விடுதலை செய்து உத்தரவிட வேண்டும் எனவும் சட்டத்தரணி கேட்டுக்கொண்டார்.

எனினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரச சட்டத்தரணி, கடுவலை நீதவானின் உத்தரவு பிணை தொடர்பான சட்ட ஏற்பாடுகளுக்கு முரணானது அல்ல எனக் கூறினார்.

எவ்வாறாயினும் முன்வைக்கப்பட்ட வாதங்களை கவனத்தில் எடுத்துக்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர். ஹெய்யன்துடுவ, பணச் சலவை மற்றும் பொது சொத்துக்கள் தொடர்பான சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால், இது பிணை சட்ட ஏற்பாடுகளுடன் சம்பந்தப்படாது எனக் கூறினார்.

இதனால், யோஷித்த ராஜபக்சவுக்கு பிணை வழங்க மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணைகளை மார்ச் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

SHARE