ஏ.ஆர்.ரகுமான் உலகம் முழுவதும் பல இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக விரைவில் இலங்கையில் இசை நிகழ்ச்சி நடத்தவிருந்தார்.
ஆனால், இலங்கையில் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என கடும் கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் பல பகுதிகளில் போஸ்டர் அடித்தனர்.
இதனால், தற்போதைக்கு இலங்கையில் இசை நிகழ்ச்சி செய்யும் எண்ணத்தை ரகுமான் கைவிட்டுள்ளாராம். இச்செய்தி அங்கு உள்ள இவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.