தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சீயான் விக்ரம். இவர் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் கோப்ரா.
அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார். ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இப்படத்தை தமிழகத்தில் வெளியிடுகிறது.
இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து ஃபார்ன் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்னாலினி ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
நன்றி சொன்ன விக்ரம்
இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக நேற்று கோப்ரா படக்குழுவினர் ட்விட்டர் ஸ்பெஸில் கலந்துகொண்டு உரையாடினார்கள்.
அப்போது ட்விட்டர் ஸ்பெஸில் விஜய்யின் ரசிகர்கள் அதிகமாக ஆதரவு தருகிறார்கள் என்று கூறிய விக்ரம், அவர்களுக்கு தன்னுடைய நன்றியையும் தெரிவித்தார்.