ரணிலிடம் மகனைக் காப்பாற்ற மன்றாடிய மகிந்த….?

291

Sri Lankan President Mahinda Rajapaksa (R) speaks with main opposition leader Ranil Wickremesinghe during the opening of the Conference of Asian Political Parties in Colombo on September 19, 2014. The meeting aims at solidarity among Asian political parties. AFP PHOTO/ Ishara S. KODIKARA (Photo credit should read Ishara S.KODIKARA/AFP/Getty Images)

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று இரகசியமாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

மகிந்த ராஜபக்ச விடுத்த வேண்டுகோளின் பேரில் நேற்று சிறிலங்கா நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் விபத்தில் மரணிக்கவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளார் என்றும், சட்டமருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னணியிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தக் கொலையின் பின்னணியில் ராஜபக்ச குடும்பத்தினரே இருப்பதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன.

மகிந்தவின் இரண்டாவது மகனே இந்தக் கொலையுடன் தொடர்புபட்டிருப்பதாகவும், மகிந்தவின் மனைவி சிராந்தியின் அறக்கட்டளைக்குச் சொந்தமான வாகனத்திலேயே அவர் கடத்தப்பட்டதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

SHARE