ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

29

 

வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு வரும் மக்களுக்கான மேலதிக ரயில் சேவைகள் இன்று பிற்பகல் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் நந்தன இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்றும் நாளையும் பதுளை, காலி மற்றும் பெலியத்தை ரயில் நிலையங்களில் இருந்து கொழும்பு கோட்டை வரை 8 மேலதிக ரயில் சேவையில் இயக்கப்படவுள்ளன.

இது தவிர நாளை மறுதினம் 16ஆம் திகதி முதல் அலுவலக ரயில் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலதிக ரயில் சேவை அட்டவணை பின்வருமாறு…

ஏப்ரல் 14 – மாலை 3.30 – பெலியத்தை முதல் கோட்டை வரை

ஏப்ரல் 14 – மாலை 5.20 – பதுளை முதல் கோட்டை வரை

ஏப்ரல் 15 – காலை 7.45 – பதுளை முதல் கோட்டை வரை

ஏப்ரல் 15 – மாலை 5.20 – பதுளை முதல் கோட்டை வரை

ஏப்ரல் 15 – காலை 6.00 – காலி முதல் கோட்டை வரை

ஏப்ரல் 15 – காலை 8.10 – பெலியத்தை முதல் கோட்டை வரை

ஏப்ரல் 15 – மாலை 1.50 – காலி முதல் கோட்டை வரை

ஏப்ரல் 16 – காலை 6.15 – காலி முதல் கோட்டை வரை

ஏப்ரல் 16 – காலை7.45 – பதுளை முதல் கோட்டை வரை

ஏப்ரல் 16 – மாலை 5.20 – பதுளை முதல் கோட்டை வரை

ஏப்ரல் 16 – அலுவலக ரயில் சேவைகள் வழமை போல் இடம்பெறும்

SHARE