கண்டி பிரதேசத்தில் புகை வண்டியில் மோதுண்டு தாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன், மகள் பரிதாபகரமாக உயிரிழந்தார் என கண்டிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரயில் கடவையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தாயும் மகளும் ரயில் மோதுண்டுள்ளதுடன் மகள் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் காயம
டைந்த தாய் கண்டி வைத்தியசாலையில் திவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இவ் விபத்துத் தொடர்பில் கண்டிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.