ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான படைவீரர் அப்ரூவராக மாறத் தீர்மானம்

318

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான கடற்படை வீரர் ஒருவர் அரச தரப்பு சாட்சியாளராக (அப்ரூவராக) மாற இணக்கம் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரை அரசாங்க சாட்சியாளராக மாற்ற சட்ட மா அதிபர் தீர்மானித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான ஆறு கடற்படை வீரர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
எதிர்வரும் 3ம் திகதி இந்த வழக்கு மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2006ம் ஆண்டில் நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலைக்கு அருகாமையில் வைத்து ரவிராஜ் மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டனர்.

SHARE