தமிழ்த் தேசியக் கூட்டiமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அரச தரப்பு சாட்சியாளர் பொய்யான சாட்சியம் அளித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச தரப்பு சாட்சியாளராக சாட்சியமளித்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் பிரிதிவிராஜ் என்பவர், பொய்யான சாட்சியமளித்துள்ளார் என எதிர்த்தரப்பு சட்டத்தரணிகள், நேற்று கொழும்பு நீதவான் திலின கமகே முன்னிலையில் தெரிவித்தனர்.
முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் (கருணா) உதவியாளர் ஒருவரும் மேற்படி பொலிஸ் கான்ஸ்டபிளும், இந்த படுகொலையில் தொடர்புபட்டுள்ளனர் என்றும் தற்போது அவர்கள், அவர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அரசாங்க தரப்பு சாட்சியாளர்களாக மாறியுள்ளனர் என்றும் சட்டத்தரணிகள், மன்றில் தெரிவித்தனர்.