அத்துடன் ரவீந்திர சந்தேஷ் கணேசன் என்பதுவே ரவி கருணாநாயக்கவின் உண்மையான பெயர் என்றும் அந்த பெயரே பாராளுமன்ற ஹன்சாட்டில் பதியப்பட்டிருப்பதாகவும் பந்துல குணவர்தன அடித் துக் கூறினார்.
எனினும் பந்துல குணவர்தன எம்.பி.யினால் மேற்படி கூறப்பட்டதையடுத்து சபைக்குள் குழப்பநிலை தோன்றியது. இனவாதத்தை தூண்டி உரைநிகழ்த்த வேண்டாம் என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல பந்துல குணவர்தனவுடன் முரண்பட்டார்.
அத்துடன் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலரும் உறுப்பினர் பந்துல குணவர்தனவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர்.
இதேநேரம் சபைக்குத் தலைமை தாங்கிய உறுப்பினர் ஆனந்த குமாரசிறி உறுப்பினரின் பெயரை மாத்திரமே பிரஸ்தாபிக்குமாறும் வேறு பெயர்களை தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து விளக்கமளித்த உறுப்பினர் பந்துல குணவர்தன கூறுகையில்,
பாராளுமன்றத்துக்கு தெரிவாகும் உறுப்பினர்களது பெயர்கள் பாராளுமன்ற ஹன்சாட்டில் பதியப்படுகின்றன. அந்த வகையில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரும் ஹன்சாட்டில் பதியப்பட்டுள்ளது.
அவர் பாராளுமன்ற உறுப்பினராக ஆனதன் பின்னர் அவரது பெயர் ரவீந்திர சந்தேஷ் கணேசன் என்றே பதியப்பட்டுள்ளது.
விடயம் அறியாதவர்கள் பாராளுமன்ற ஹன்சாட்டை எடுத்து வாசித்து தெரிந்து கொள்ள முடியும் என்றார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானங்களை நிறை வேற்றிக் கொள்வதற்கான விவாதத்தின் போதே மேற்படி சர்ச்சை எழுந்திருந்தது