ரூபாய்களுக்காக இளம் சமூகத்தை சீரழிக்க அனுமதியில்லை: ஜனாதிபதி

307

ரூபாய்களுக்கும், சதங்களுக்கும் இடமளித்து இளம் சமூகத்தை வழி தவறச் செய்யும் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ரூபாய்களைக் கருத்திற் கொண்டு அவ்வாறான வேலைத் திட்டங்களுக்கு அனுமதியளிப்பதை விட அது குறித்த நன்மை தீமைகளை ஆராய்ந்து செயற்படுவது அனைவரினதும் பொறுப்பு என அம்பாறையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறான விமர்சனங்கள் வந்தாலும் எமது கலாசாரம் மற்றும் ஒழுக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு ஒரு போதும் தாம் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் 50 அறநெறிப் பாடசாலைகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் இந்தப் பாடாசலைகளின் நிர்மாணப் பணிகளில் இராணுவத்தினரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

வளர்ந்து வருகின்ற தொழில்நுட்பத்தினால் சமூகத்தில் மனிதத்துவம் அற்றுப்போவதை கருத்திற்கொண்டு நற்பண்புகள் மற்றும் ஒழுக்க விழுமியங்களை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு அனைத்து மதகுருமார்களின் பொறுப்பு என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE