ரூபாவின் பெறுமதியில் ஏற்படும் திடீர் அதிகரிப்பு : ஜனாதிபதி ரணில் வெளியிட்ட தகவல்

46

 

மெரிக்க டொலரின் பெறுமதி எதிர்காலத்தில் 280 ஆக குறையும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த சிரமங்கள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் அனைவரும் தற்போது சற்று தளர்வாக வாழ்க்கையை கழித்து வருகின்றோம். இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னர் அவ்வாறான நிலைமை ஒன்று காணப்படவில்லை.

குறைந்த வருமானம்
அனைவரும் துன்பங்களை அனுபவித்தோம். பணிக்கு செல்ல முடியவில்லை. உணவு பெற்றுக் கொள்ள முடியவில்லை.

மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் போனது பாடசாலைகள் மூடப்பட்டது. அதிகமான துன்பங்களை நீங்களே அனுபவித்தீர்கள்.

குறைந்த வருமானம் கொண்ட மக்கள், பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்த மக்கள், விவசாயிகள் போன்றோர் கடும் நெருக்கடியின் போதும் அதனை பொறுத்துக் கொண்டனர். அதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுவதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.

வற் வரி
நாட்டை ஏற்கும் போது கடுமையான சிக்கலுக்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என நான் நினைத்தேன்.

அரசாங்கத்தின் செலவுகளை குறைத்தோம். வற் வரி அதிகரித்தோம். அந்த வரியை நீங்களே சுமந்தீர்கள். அதனை சுமந்தமையினால் நாடு நிலையான நிலைக்குள்ளாகியுள்ளது.

SHARE