ரெலோவின் கிளிநொச்சி அமைப்பாளர் தமிழர் விடுதலை கூட்டணியின் பொது சின்னத்தில் போட்டியிட முடிவு.!

196

ரெலோவின் கிளிநொச்சி அமைப்பாளர் தமிழர் விடுதலை கூட்டணியின் பொது சின்னத்தில் போட்டியிட முடிவு என கிளிநொச்சியில் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தார். இன்று காலை கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்விடயம் தொடர்பில் வெளிப்படுத்தினார்.

தமிழரசு கட்சியின் தலைவர் தற்புாது ரணிலே உள்ளார். பதி்ல் தலைவரே சம்பந்தன் அவர்கள். கடந்த காலங்களில் பேரினவாத அரசுக்கு எதிராக நாம் போராடிவந்தோம். இன்று அவ்வாறில்லை. அதே பேரினவாத அரசே இன்று தமிழரசு கட்சியை பாதுகாத்து வருகின்றது. யாழில் தீர்க்க வேண்டிய பிரச்சினை கொழும்பில் தீர்க்கப்படும் அளவிற்கு இன்றய அரசியல் காணப்படுகின்றது.

தமிழரசு கட்சிக்கு வாக்களித்தால் நாம் அரசுக்கு மீண்டும் அடிமையாகிவிடுவோம். தமிழரசு கட்சிக்கு வாக்களித்தால் அது நமக்கு சாபக்கேடு. இன்று அரசியல் மாற்றம் ஒன்று தேவைப்படுகின்றது. ரெலோ அமைப்பு வெளியேறுவதாக தெரிவித்து மீண்டும் கொழும்பிற்கு சென்று சேர்ந்தமை கவலையே. இது தொடர்பில் நான் அடைக்கலநாதன் உள்ளிட்டோர்க்கு தெரிவித்திருந்தேன்.

தமிழரசு கட்சிக்கு வாக்கழித்தால் பௌத்த பேரினவாதத்திற்கு வாக்களிக்கின்றோம் எனபதையும், ஒரே நாடு ஒன்ற நிலைக்கு வாக்களிக்கின்றோம் என்ற நிலைக்கும் தள்ளப்படுவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் நான் பொது சின்னமொன்றில் போட்டியிட வேண்டும் எனவே தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவெடுத்துள்ளேன். மக்கள் நிலைமையை முழுமையாக அறிந்துள்ளார்கள்.. இன்றய சூழலில் அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்க நினைன்னும் தமிழரசு கட்சிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் பதிலடி கொடுக்க வேண்டிய காலத்திற்குள் சென்றுள்ளோம். அடுத்த தலைமுறைக்காக ஆனந்தசங்கரி ஐயா அவர்கள் தனது கட்சியின் சின்னத்தினை பொது சின்னத்திற்காக விடுக்கொடுப்பு செய்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்தி நாம் செயற்பட வேண்டும்.

வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து சபைகளிலும் பொது சின்னமாகிய உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE