லிந்துலையில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து சாரதி பலி

224

முச்சக்கரவண்டியொன்று 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி ஸ்தலத்திலே பலியானதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெயார்வெல்  தேயிலை தொழிற்சாலை பகுதியிலே 10.09.2016 அதிகாலை இவ்விபத்து சம்பவித்துள்ளது. டீ மலை தோட்டத்தை சேர்ந்த 29 வயதுடைய  பெருமாள் நாகேந்திரன் என்பரே மரணமானார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில் கொழும்பிலிருந்து லிந்துலை டீ மலைக்கு தனது மனைவி மற்றும் குழந்தையை ஏற்றிக்கொண்டு வந்த முச்சக்கரவண்டியின்  ஒட்டுனருக்கு நித்திரை வந்ததன் காரணத்தால் பாதையை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் வந்த மனைவி மற்றும் 1 வயதும் ஆறுமாதங்களுமான குழுந்தையும் காயமுற்ற நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்ததுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் தெரிவித்தனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

unnamed-1

SHARE