லிந்துலை நாகசேனை அகரகந்த தோட்டத்தில் இயங்கி வரும் பாரதி மொழிசங்கத்தின் 05 ஆண்டு நிறைவு விழா

331

 

லிந்துலை நாகசேனை அகரகந்த தோட்டத்தில் இயங்கி வரும் பாரதி மொழிசங்கத்தின் 05 ஆண்டு நிறைவு விழா 27.12.2015 அன்று சங்கத்தின் தலைவர்  கு.மோகன்ராஜ்  தலைமையில் தோட்ட கலாசார மண்டப திடலில் நடைபெற்றது.

30e817b5-f9ef-443e-b778-bab50b6cefba 89c41ba1-2c48-481e-afe7-414b72d5605e 7752a627-6fb1-43e1-a5eb-d5befb3b31cf

இவ்விழாவில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.செல்வகுமார், தேசிய மொழிகள் ஒருமைபாட்டு அமைச்சின் பிரத்தியோக செயலாளர் ஜோதிவேல், தோட்ட அதிகாரி தாரக்க விஜயவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் கலை, கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிய மாணவர்களுக்கும், பிராந்திய செய்தியாளர்கள், பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கபட்டது. அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு மொழிசங்கத்தின் தலைவர் மோகன்ராஜ் அவர்கள் நினைவு சின்னம் வழங்கி வைத்தார். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.

 

SHARE