விஜய் படம் என்றாலே எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் ரிலீஸ் நேரத்தில் வரிசைகட்டி பல பிரச்சனைகள் வந்துவிடும்.
தற்போது அதிகாலை காட்சி போடக்கூடாது என தமிழக அரசே படத்திற்கு சிக்கலை கொடுத்து இருக்கிறது. அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் தயாரிப்பாளர், ஆனாலும் அனுமதி கிடைக்கவில்லை.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க தற்போது கர்நாடகாவில் லியோ படத்திற்கு சிக்கல் ஒன்று வந்திருக்கிறது.
தமிழக அரசு காவிரி நீரை கேட்டால், நாங்கள் லியோ படத்தை இங்கே விடமாட்டோம் என வாட்டாள் நகராஜ் கூறி இருக்கிறார்.
லியோ ரிலீஸ் ஆகும் தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்தப்போவதாகவும் கூறி இருக்கிறார்.