ஹோமாகம நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணத்தை வைப்புச் செய்யச் சென்றவரிடம் கொள்ளையிட முயற்சித்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வைப்புச் செய்ய வந்தவரிடம் இருந்த பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் செல்ல முயற்சித்த இருவரை அங்கிருந்தவர்கள் பிடித்து பொலிஸரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று மதியம் 12.30 அளவில் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.