வடக்கில் அமைதியாக மாவீரர் தினம் நடந்ததால் எவரையும் கைது செய்யவில்லை என்கிறார் காவல்துறை பேச்சாளர்-

536

நேற்றைய தினம் வடக்கு கிழக்கில் மிகவும் அமைதியான முறையில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டதாகவும் எவரும் சட்டத்தை மீறி நடந்து கொள்ளவில்லை என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவாண் குணசேகர தெரிவித்தார். இதேவேளை நல்லூர் ஆலயத்தின் முன்னறலில் சிலர் விளக்கேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதாக குறிப்பிட்ட காவல்துறை ஊடகப் பேச்சாளர் அது அவர்களின் தனிப்பட்ட விடயம் என்பதால் சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  இம்முறை மாவீரர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ள ருவாண் குணசேகர புலிகள் அமைப்பை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டங்களோ, ஊர்வலங்களோ, நிகழ்வுகளோ இடம்பெறவில்லை எனவும் பதற்றமான எந்தவொரு சூழ்நிலையும் நிலவவில்லை என்பதுடன் அதனால் எவரையும் கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் இறந்தவர்களுக்கு அமைதியான முறையில் அஞ்சலி செலுத்தும் தனிப்பட்ட விடயத்தை தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்

SHARE